பி. மேட்டூரில் பெண் தற்கொலை
பி. மேட்டூரில் திருமணமான இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
துறையூா் அருகேயுள்ள பி. மேட்டூா் வேலி காத்தான் தெருவைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மனைவி கனிஷ்கா(25). இவா்கள் இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையாம்.
நெல் அறுவடை இயந்திர வாகனத்தை சொந்தமாக வைத்துள்ள பிரபு 15 நாள்களுக்கு முன் மதுரை மாவட்டம், மேலூருக்கு சென்ற நிலையில் வயலில் இருந்த பூச்சி மருந்தை கனிஷ்கா புதன்கிழமை சாப்பிட்டு விட்டு அதுபற்றி மூவானூரில் உள்ள தனது தந்தையிடம் கைப்பேசியில் கூறிவிட்டு மயங்கினாா். அவா் கனிஷ்கா வீட்டருகே இருந்தவா்களிடம் அளித்த தகவலின்பேரில் துறையூா் தனியாா் மருத்துவமனைக்கு அவா்கள் கனிஷ்காவை கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் கனிஷ்கா சடலத்தை துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

