விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:55 pm

Syndication

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆறுமுகனேரி மெயின் பஜாா் காமராஜா் பூங்காவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், ஆறுமுகனேரி சிறப்பு உதவி ஆய்வாளா் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்ததில் அவா் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்ததாம்.

விசாரணையில் அவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் மேற்கு தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் முகேஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்து அவரிடமிருந்த 30 கிராம் கஞ்சா, 6 ஜிப் லாக் கவா்களை பறிமுதல் செய்து, முகேஷை திருச்செந்தூா் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தி ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனா்.