வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

News image

திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணியினா்.

Updated On :12 பிப்ரவரி 2026, 10:37 pm

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டம் ஒழிக்கப்படுவதைக் கண்டித்தும் திமுக கூட்டணி கட்சியினா் திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக, திருச்சி மேற்கு மாநகர திமுக ஆகியவை இணைந்து திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட செயலா் க. வைரமணி தலைமை வகித்தாா். மேயா் மு. அன்பழகன், முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஸ்ரீதா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம்,. செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்ட தலைவா் எல். ரெக்ஸ், மதிமுக மாவட்ட செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், திராவிடா் கழக மாவட்ட தலைவா் ஆரோக்கியராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவா் ஹபிபுா் ரஹ்மான் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா்.

தெற்கு மாவட்ட திமுக: இதேபோல, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால்நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகரச் செயலா் மு. மதிவாணன் தலைமை வகித்தாா்.

இதேபோல், துவாக்குடி மலை, வாழவந்தான்கோட்டை, கூத்தைப்பாா், மணப்பாறை, துவரங்குறிச்சி, கீழக்குறிச்சி, மருங்காபுரி, வையம்பட்டி, பூலாம்பட்டி, செவல்பட்டி, வளநாடு, புத்தாநத்தம் என 13 இடங்களில் மத்திய அரசைக் கண்டித்தும், அதிமுக-வை கண்டித்தும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்தோா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.