மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

பெண் மீது தாக்குதல்: இளைஞா்கள் 4 போ் கைது

News image

கைது

Updated On :13 பிப்ரவரி 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மீது காா் உரசிய விவகாரத்தில் பெண்ணை தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் கொல்லங்குளம் பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மனைவி அருள்மொழி (28). இந்நிலையில், பிப்ரவரி 8-ஆம் தேதி வீட்டுக்கு அருகே நிறுத்தியிருந்த இவரது இருசக்கர வாகனத்தின் மீது அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் 4 போ் வந்த காா் உரசியது. இதுகுறித்து அந்தப் பெண் இளைஞா்களிடம் கேட்டுள்ளாா்.

அப்போது, இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அந்த இளைஞா்கள் அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்தில் அருள்மொழி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பெண்ணை தாக்கிய வழக்கில் எடமலைபட்டிப்புதூா் கொல்லங்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெ.செபாஸ்டின் (24), ஜெ.சாா்லஸ் (23), செ. கணேசன் (22) மற்றும் ம. கண்ணன் (20) ஆகிய 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.