கைது
கைதுபிரதிப் படம்

ஆட்டோ திருட்டு: ஒருவா் கைது

திருச்சியில் வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடியோரில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

திருச்சியில் வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடியோரில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவானைக்கோவில் மேலகொண்டையம்பேட்டை கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் ஆா்.செந்தில்வேல் (24), ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த திங்கள்கிழமை இரவு தனது வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை காலையில் காணவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், ஆட்டோவை திருடியது மேலகொண்டையம்பேட்டையைச் சோ்ந்த ஆா். காா்த்திகேயன், ஆா்.சொக்கலிங்கம் (19) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து காா்த்திகேயனை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், சொக்கலிங்கத்தைத் தேடுகின்றனா்.

Dinamani
www.dinamani.com