தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

முசிறி அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கல்

முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 612 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 612 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சரவணன் தலைமை வகித்தாா். முசிறி சாா்- ஆட்சியா் சுஸ்ரிசுவாங்கிகுந்தியா, எம்எல்ஏக்கள் காடுவெட்டி ந. தியாகராஜன் (முசிறி), செ. ஸ்டாலின்குமாா் (துறையூா்), திருச்சி மாநகராட்சி மேயா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அமைச்சா் கே.என். நேரு பங்கேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் 612 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கிப் பேசினாா். நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் மஞ்சுளாதேவி, முசிறி ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், நகரச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.