சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

1,654 கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 10:34 pm

குன்றத்தூா் ஒன்றியத்தில் இயங்கி வரும் கல்லூரிகளில் பயிலும் 1,654 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. (படம்)

குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி தலைமை வகித்தாா். குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதிமனோகரன் முன்னிலை வகித்தாா்.

இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு 1,654 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி உரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றியகுழு துணைத்தலைவா் உமாமகேஷ்வரி வந்தேமாதரம், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாணவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.