பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் 12 கைப்பேசிகள் பறிமுதல்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 12 கைப்பேசிகள் பறிமுதல்

News image
பிரதிப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 7:32 pm

Syndication

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை 12 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய வெளிநாட்டினா் பலா் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த முகாமில் வசிப்பவா்கள் கைப்பேசிகள் பயன்படுத்துவதாக கே.கே.நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கே.கே.நகா் காவல் உதவி ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் சிறப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, முகாம் வளாகத்தில் 12 கைப்பேசிகள், 4 திறன் கடிகாரங்கள், மோடம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகள், திறன் கடிகாரங்கள் யாருடையவை என்பது தெரியவில்லை. இதுகுறித்து கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.