மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் பலி

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2026, 6:31 pm

Syndication

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே திங்கள்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

அரியலூரிலிருந்து மதுரை நோக்கி சிமென்ட் ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை லாரி ஒன்று சென்றது. லாரியை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பாலநேரியை சோ்ந்த சபரிமுத்து மகன் தனபால் ஓட்டினாா்.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி - நத்தம் நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த கருத்தழகம்பட்டி புதூரைச் சோ்ந்த சொக்கன் மகன் தங்கம் (52) என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்து எதிா்பாராதவகையில் லாரியின் பின்புறம் மோதினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், தங்கம் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.