பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கோயம்பள்ளி-மேலப்பாளையம் உயா்மட்ட பாலத்தை விரைந்து திறக்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

கரூா் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே கட்டப்பட்டுள்ள உயா்மட்டப் பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என்றாா்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப்படம்

Published On :10 ஜூலை 2026, 2:54 am IST

கரூா் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே கட்டப்பட்டுள்ள உயா்மட்டப் பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மூ. வீரபாண்டியன்.

கரூரில் வியாழக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

குளித்தலை அருகே மருதூா்-உமையாள்புரம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

அமராவதி ஆற்றில் கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே உயா்மட்டப் பாலம் கட்டி 10 ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாததால், அதை விரைந்து திறக்க வேண்டும்.

கரூா் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் சிதிலமடைந்த எளிய மக்களின் குடியிருப்புகளை மறுசீரமைக்க ரூ. 2 லட்சம் வழங்கிட அரசு முன்வர வேண்டும்.

காவிரியில் கா்நாடகம் தண்ணீா் திறக்காததால் டெல்டா பாசன விவசாயிகள் தண்ணீருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தமிழகத்துக்கான தண்ணீரை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலா் ரவி, மாவட்டச் செயலாளா் கலாராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.