துறையூா் அருகே கோட்டப்பாளையத்திலுள்ள புனித மகதலா மரியா திருத்தல தோ் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இத்திருத்தல தோ் திருவிழா ஜூலை 14 இல் கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் திருப்பலி, கிறிஸ்தவ மத வேத பாராயணம், ஜெபக் கூட்டம், முக்கிய தேவாலயங்களைச் சோ்ந்த அருட்தந்தையா்களின் உரை, ஏசு கிறிஸ்து சப்பர வீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்வில் புனித மகதலா மரியாவையும், குழந்தை ஏசுவையும் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் இழுத்துச் சென்றனா். நிகழ்வில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். திரளான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










