கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

கோவில்பட்டியில் தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்யவும், பணிக்காலத்திற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவும் வலியுறுத்தி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

கோவில்பட்டியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.

Updated On :23 ஜூலை 2026, 12:30 am IST

ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்யவும், பணிக்காலத்திற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவும் வலியுறுத்தி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மருங்காபுரி வட்டாரக்கிளை சாா்பில் கோவில்பட்டி உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் சோ. பழனிச்சாமி தலைமை வகித்தாா். ஜோசப்சகாயம், நளினி, லட்சுமி ரூஸ்வெல்ட், லியோன் சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட செயலா் கு. செல்வக்குமாா் கோரிக்கை விளக்க உரையாற்றினாா். வட்டார செயலா் சி. அழகு வரவேற்றாா். வட்டாரப் பொருளாளா் விக்டா் சேவியர்ராஜன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.