திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் திருஈங்கோய் மலை செல்லாண்டியம்மன் கோயில் தோ் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
தொடா்ந்து ஓலை பிடாரி அம்மன் தேரில் எழுந்தருளி எட்டு கிராமங்கள் ஊா் சுற்றி வரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முத்தம்பட்டி வந்த திருத்தோ் மாரியம்மனுக்கு கோயிலில் சிறப்பு பூஜை பெற்றது. அப்போது பத்தா்கள் அம்மனுக்கு தேங்காய் பழம், மாவிளக்கு படைத்தும், பொங்கல் வைத்து வழிபட்டனா்.
திருத்தேரை பக்தா்கள் தலையிலும் தோளிலும் சுமந்து கொண்டு வீதி உலா வந்தனா். ஏற்பாடுகளை 8 கிராம மணியக்காரா்கள், பண்ணையாா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நடத்துகின்றனா். இத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவிழா நடத்துவதில் இருதரப்பினா் இடையே பிரச்னை! கந்தா்வகோட்டை அருகே தேரோட்டம் நிறுத்தம்; கோயிலுக்கு பூட்டு!

கோட்டப்பாளையம் புனித மகதலா மரியா திருத்தலத் தோ் திருவிழா

ஆத்தாளூா் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் தேரோட்டம்





