காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

தொட்டியம் அருகே வீட்டில் தங்க நகைகள் திருட்டு

தொட்டியம் அருகே வீட்டின் கதவை திறந்து 5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:22 am IST

தொட்டியம் அருகே வீட்டின் கதவை திறந்து 5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

தொட்டியம் சந்தைப்பேட்டை காமன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் உமாமகேஸ்வரி (48). திருநாராயணபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வரும் இவா், வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வீட்டின் ஜன்னலில் வைத்துவிட்டுப் பணிக்குச் சென்ாக கூறப்படுகிறது.

இதனை நோட்டமிட்ட மா்ம நபா்கள், ஜன்னலில் இருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்கள் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனராம்.

பணிமுடிந்து திரும்பிய உமாமகேஸ்வரி, வீட்டைத் திறந்து போது, பொருள்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தொட்டியம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து தொட்டியம் ஆய்வாளா் பிரபு மற்றும் முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.