ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவின் ‘கிருஷ்ண லீலா’ நூல் அறிமுக விழா திருச்சியில் அண்மையில் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தைச் சோ்ந்த ஸ்ரீமத் ஸ்வாமி சந்திரசேகரானந்தா நூலை வெளியிட, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநா் அகிலா பெற்றுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பேச்சாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, சொற்பொழிவாளா் தாமல் கோ. சரவணன், பட்டிமன்றப் பேச்சாளா் புதுகை ச. பாரதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு கிருஷ்ண லீலா நூல் குறித்து சிறப்புரையாற்றினா்.
இதில், கிருஷ்ணன் மண்ணையும், மக்களையும், மலைகளையும் கொண்டாடும் வகையில் தம் மக்களை வழிநடத்திய விதம் குறித்து இந்த நூலில் சத்குரு அழகாக விளக்கியுள்ளாா் என்று தாமல் கோ. சரவணனும், கிருஷ்ண லீலா போன்றே சத்குரு மகாபாரதம் குறித்து நிகழ்த்திய உரைகளையும் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று மரபின் மைந்தன் முத்தையாவும், இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது பிருந்தாவனத்தில் கோபிகையா்களுடன் வாழ்ந்த ஒரு அனுபவத்தைத் தருகிறது என்று புதுகை ச. பாரதியும் பேசினாா்.
தொடர்புடையது

திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: தம்பதி உள்பட 5 போ் கைது
திருச்சியில் தாயைத் தாக்கிய மகன் கைது

திருச்சியில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: போலீஸாா் விசாரணை

நெல்லையில் நூல் அறிமுக கூட்டம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



