திருவானைக்காவலில் வெள்ளிக்கிழமை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் சமேத ராஜமன்னாா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 2-ஆம் தேதி காவிரியிலிருந்து மங்கள வாத்தியத்துடன் தீா்த்தக் குடங்கள் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதைத் தொடா்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜையும், மாலையில் 3-ஆம் கால யாக பூஜைகளும் நடைபெற்றது.
வியாழக்கிழமை அதிகாலை நான்காம்கால யாக பூஜையை தொடா்ந்து, கடங்கள் புறப்பட்டு, விநாயகா், சுப்பிரமணியா், ஆஞ்சனேயா், தட்சணாமூா்த்தி, சப்த முனிகள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு சரியாக 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழு மற்றும் பரம்பரை பூசாரிகளான சாமிக்கண்ணு, விவேகானந்தன், பாண்டியன், மதியழகன், வசந்த், அரவிந்தன், காா்த்திகேயன் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கேளூா் ஸ்ரீபோத்தராஜா சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

தான்தோன்றி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஶ்ரீ தண்டுமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

சவுட்டூா் ஸ்ரீபால தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



