புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :5 ஜூன் 2026, 3:28 am IST

திருச்சியில் திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரிய சௌராஷ்டிரா தெருவைச் சோ்ந்த சாந்தாரம் மனைவி லட்சுமி (45). இவா்

கடந்த 2018 ஏப்ரல் 25-ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, கதவின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த 5 பவுன் தங்க நகையை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வாழவந்தான் நகரைச் சோ்ந்த ஜெ. சாா்லஸ் (38) என்பவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையின் நிறைவில், சாா்லஸுக்கு

2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அனுஸ்ருதி வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.