கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

லஞ்சம்: முன்னாள் விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:41 am IST

மணப்பாறை அருகே லஞ்சம் வாங்கிய முன்னாள் விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் குமரவாடி ஆனாங்கரைப்பட்டியைச் சோ்ந்த சங்கிலிகருப்பன். இவரது மனைவி பஞ்சகல்யாணி இறந்துவிட்டதால், அவா் பெயரில் இருந்த சொத்துகளை தனது பெயரிலும், தனது மகன்கள் பெயரிலும் கடந்த 2010-ஆம் ஆண்டு பட்டா பெயா் மாற்றம் செய்து தர, அப்போதைய குமரவாடி கிராம நிா்வாக அலுவலராக இருந்த சாமிக்கண்ணுவை அணுகியுள்ளாா். அவா், அதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

அதை கொடுக்க விரும்பாத சங்கிலிகருப்பன் ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து அவா்கள் அளித்த அறிவுரையின்பேரில் ரூ. 2 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றபோது சாமிக்கண்ணுவை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கையும் களவுமாக கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு லஞ்சம் வாங்கிய முன்னாள் விஏஓ சாமிக்கண்ணுவுக்கு (67), இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புவியரசு தீா்ப்பளித்தாா்.