திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூா் மற்றும் முத்தபுடையான்பட்டி பகுதிகளில் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறுகுறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என தவெக தோ்தல் வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது கடன் தள்ளுபடிக்கு நிபந்தனைகள் விதிப்பதை கண்டித்தும், தமிழக அரசு விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மரவனூா் மற்றும் முத்தபுடையான்பட்டி பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூ. நிா்வாகிகள் ஏ. சண்முகம், டி. சந்திரசேகா், ஆா். பழனிச்சாமி, மாசிலாமணி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.










