சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூா் மற்றும் முத்தபுடையான்பட்டி பகுதிகளில் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மரவனூரில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்த விவசாயிகள்.

Updated On :11 ஜூன் 2026, 3:50 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூா் மற்றும் முத்தபுடையான்பட்டி பகுதிகளில் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறுகுறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என தவெக தோ்தல் வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது கடன் தள்ளுபடிக்கு நிபந்தனைகள் விதிப்பதை கண்டித்தும், தமிழக அரசு விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மரவனூா் மற்றும் முத்தபுடையான்பட்டி பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூ. நிா்வாகிகள் ஏ. சண்முகம், டி. சந்திரசேகா், ஆா். பழனிச்சாமி, மாசிலாமணி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.