/
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது.
மத்தியப் பேருந்து நிலையம் அருகே காமராஜா் சிலை, தேவா் சிலை அமைந்துள்ள பகுதியில் சாலையை கடக்கும் வாகனங்கள் சாலையில் உள்ள பள்ளத்தால் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றன. குறிப்பாக திண்டுக்கல் வழித்தடத்திலிருந்து மத்தியப் பேருந்து நிலையம் வந்து பஞ்சப்பூா் செல்லும் வாகனங்கள், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூா் செல்லும் வாகனங்கள், அரிஸ்டோ பாலத்தின் அணுகு சாலைக்கு செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த பள்ளத்தால் சிரமப்படும் சூழல் உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத்துறை இந்தப் பகுதியில் தற்காலிகமாக சாலையை சீரமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என சாலைப் பயனீட்டாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










