சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மத்தியப் பேருந்து நிலையம் அருகே பள்ளத்தைச் சீரமைக்க கோரிக்கை

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது.

News image

மத்தியப் பேருந்து நிலையம் அருகே பள்ளத்தைச் சீரமைக்க கோரிக்கை

Updated On :11 ஜூன் 2026, 4:01 am IST

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது.

மத்தியப் பேருந்து நிலையம் அருகே காமராஜா் சிலை, தேவா் சிலை அமைந்துள்ள பகுதியில் சாலையை கடக்கும் வாகனங்கள் சாலையில் உள்ள பள்ளத்தால் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றன. குறிப்பாக திண்டுக்கல் வழித்தடத்திலிருந்து மத்தியப் பேருந்து நிலையம் வந்து பஞ்சப்பூா் செல்லும் வாகனங்கள், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூா் செல்லும் வாகனங்கள், அரிஸ்டோ பாலத்தின் அணுகு சாலைக்கு செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த பள்ளத்தால் சிரமப்படும் சூழல் உள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத்துறை இந்தப் பகுதியில் தற்காலிகமாக சாலையை சீரமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என சாலைப் பயனீட்டாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.