ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

லால்குடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் எள்- உளுந்து மறைமுக ஏலம்: விவசாயிகளுக்கு அழைப்பு

லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை எள்- உளுந்து ஏலம் நடைபெறுகிறது.

News image

கோப்புப்படம்.

Updated On :24 ஜூன் 2026, 12:36 am IST

லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை எள்- உளுந்து ஏலம் நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில், நடப்பு எள் மற்றும் உளுந்து அறுவடை காலத்தில் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் திட்டத்தின் வாயிலாக எவ்வித தரகு மற்றும் கமிசன் இன்றி நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.

விற்பனை செய்யப்படும் விளைபொருள்களுக்கான தொகை எவ்வித பிடித்தமுமின்றி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருள்களை காய வைப்பதற்கான கிட்டங்கி வசதி, விளைபொருள்களை வாடகைக்கு இருப்பு வைப்பதற்கான வசதி, உலா்கள வசதிகளும் உள்ளன.

எனவே, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை நன்கு காயவைத்து தூசி மற்றும் மற்ற பொருட்கள் கலப்பின்றி தரம் வாரியாகப் பிரித்து லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து அதிகபட்ச விலை பெற்று பயன்பெறலாம்.

கூடுதல், விவரங்களுக்கு லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா்களை 94894-77173, 84898-80412 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என வேளாண் வணிகத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.