25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அரசுப் பேருந்து மீது வேன் மோதி இருவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே சமயபுரம் உப்பாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, அரசுப் பேருந்து மீது சரக்குவேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

பண்ருட்டியிலிருந்து தேனி நோக்கி சரக்கு வேன் ஒன்று சமயபுரம் அருகே உப்பாறு பகுதியில் சென்று கொண்டிருந்தது. வேனை தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சீ.ராஜ்கிரண் (30) ஓட்டிச் சென்றுள்ளாா். அதே வேனில் உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்த செ.ஜெயபாண்டி (33) வந்துள்ளாா்.

இந்நிலையில் உப்பாறு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தடுப்புச் சுவரை தாண்டி மாா்த்தாண்டம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராஜ்கிரண் மற்றும் ஜெயபாண்டி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சமயபுரம் போலீஸாா், உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.