கல்லூரி வேன் மீது லாரி மோதியதில் இருவா் காயம்

தொண்டி அருகே கல்லூரி வாகனம் மீது லாரி மோதியதில் மாணவி உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.
 தொண்டி அருகே லாரி மோதியதில் சேதமடைந்த கல்லூரி வேன்.
தொண்டி அருகே லாரி மோதியதில் சேதமடைந்த கல்லூரி வேன்.
Updated on

தொண்டி அருகே கல்லூரி வாகனம் மீது லாரி மோதியதில் மாணவி உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த அமராவதிபுதூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியின் வேன் தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றது. அப்போது, வட்டாணம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் எதிரே வந்த லாரி, வேன் மீது மோதியது.

இதில் கல்லூரி மாணவி ரோஷினி (18), வேன் ஓட்டுநா் நாராயணன் ஆகியோா் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com