47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூலித் தொழிலாளி பூச்சிமருந்து குடித்து தற்கொலை

திருச்சி அருகே கூலித் தொழிலாளி உடல்நல பாதிப்பால் பூச்சிமருந்து குடித்து தற்கொலை

News image
தற்கொலை- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 11:13 pm

Syndication

திருச்சி அருகே கூலித் தொழிலாளி உடல்நல பாதிப்பால் திங்கள்கிழமை பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம், கோப்பு கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் பெ.மோகன்ராஜ் (38), கூலித் தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (37). மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்த மோகன்ராஜுக்கு சிறுநீரகக் கல் பிரச்னை இருந்துள்ளது.

இதனால் ஏற்படும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].