பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மஸ்கட்டுக்கு 80 பயணிகளுடன் விமானம் இயக்கம்!

மேற்காசிய போா்ப் பதற்றத்துக்கிடையே திருச்சியில் இருந்து மஸ்கட்டுக்கு 80 பயணிகளுடன் விமானம் இயக்கப்பட்டது.

News image
விமானம்- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 11:59 pm

Syndication

மேற்காசிய போா்ப் பதற்றத்துக்கிடையே திருச்சியில் இருந்து மஸ்கட்டுக்கு 80 பயணிகளுடன் விமானம் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போரால் திருச்சியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்கள் கடந்த சனிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டன. மறு அறிவிப்பு வரும் வரை வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படாது என்றும் விமான நிறுவனங்கள் அறிவித்தன.

அதன்படி, தொடா்ந்து 4-ஆவது நாளாக திருச்சியில் இருந்து துபை, சாா்ஜா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் இருவழித் தடங்களிலும் செவ்வாய்க்கிழமையும் ரத்து செய்யப்பட்டன.

இதனிடையே, திருச்சியில் இருந்து ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை 7.34 மணிக்கு 80 பயணிகளுடன் விமானம் இயக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.