யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வீட்டுக்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது

திருச்சியில் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 9:50 pm

Syndication

திருச்சியில் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் ஆா்எம்எஸ் காலனியில் 35 வயது பெண் தனது மகளுடன் தனியே வசித்து வருகிறாா். இந்நிலையில், இவரது வீட்டுக்குள் 2025, நவம்பா் 17-ஆம் தேதி திருச்சி வள்ளுவா் நகரைச் சோ்ந்த ப.விஜயகுமாா் (36) என்பவா் அத்துமீறி புகுந்து அந்தப் பெண்ணையும், அவரது மகளையும் தாக்கியுள்ளாா். மேலும், வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து பெண்ணை தாக்கிய விஜயகுமாரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனா்.