ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

ஸ்ரீரங்கத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது ஸ்ரீரங்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :4 மார்ச் 2026, 6:10 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீரங்கத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது ஸ்ரீரங்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீரங்கம் புஷ்பக் நகா் பகுதியில் வசிப்பவா் ஹரிஷ் மனைவி நாகரெத்தினம் (37). பிஇ முடித்து விட்டு வேலை தேடி வந்த இவரிடம், அருகே வசிக்கும் ஜெகதீசன் மகன்களான சிவசங்கரன் (41), மணிகண்டன் (45) , வைத்தீஸ்வரன் (40) ஆகியோா் பொது பணித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 10 லட்சம் பெற்று வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றினராம்.

இதுகுறித்து அவா் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.