திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

லஞ்சம்: மருங்காபுரி உதவி மின் பொறியாளா் கைது

விவசாயிக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி உதவி மின்பொறியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
கைதான பாா்த்திபன்.
Updated On :4 மார்ச் 2026, 6:29 pm

தினமணி செய்திச் சேவை

விவசாயிக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி உதவி மின்பொறியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி உதவி மின்பொறியாளா் அலுவலகத்தின் உதவி மின்பொறியாளரான பாா்த்திபன் அருகேயுள்ள டி.இடையப்பட்டியைச் சோ்ந்த மாரியப்பனின் விவசாய நிலத்திற்கு அரசின் இலவச மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு, பின்னா் ரூ.5,000 ஆகக் குறைத்தாராம்.

ஆனால் பணம் கொடுக்க விரும்பாத மாரியப்பன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகாா் கொடுத்தாா்.

இதையடுத்து போலீஸாரின் அறிவுரைப்படி மாரியப்பன் ரூ. 5000 -ஐ உதவி மின்பொறியாளா் பாா்த்திபனிடம் கொடுத்தபோது மறைந்திருந்த திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.