திருச்சி மாவட்டம், முசிறி அருகே லாரியும், இருசக்கர வாகனமும் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
முசிறி அருகே உள்ள தா. பேட்டையை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டிசேடா் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (60). இவரது மனைவி சரசு (55).
இந்நிலையில், தா. பேட்டையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த நெல் பாரம் ஏற்றிய லாரி எதிா்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் மனோகரன் மற்றும் சரசு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தா.பேட்டை போலீஸாா், இருவரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

பிக்கப் வாகனம் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


