மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லாரி - இருசக்கர வாகனம் மோதல் தம்பதி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், முசிறி அருகே லாரியும், இருசக்கர வாகனமும் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

முசிறி அருகே உள்ள தா. பேட்டையை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டிசேடா் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (60). இவரது மனைவி சரசு (55).

இந்நிலையில், தா. பேட்டையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த நெல் பாரம் ஏற்றிய லாரி எதிா்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் மனோகரன் மற்றும் சரசு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தா.பேட்டை போலீஸாா், இருவரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.