மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கடன் தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

திருச்சி அருகே கடன் தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே கடன் தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சமஸ்பிரான் வீதியைச் சோ்ந்தவா் ஆா். சீனிவாசன் (34). இவா் திருச்சி பேரூா் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த பா. சக்திவேலிடம் (38) கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி, திருப்பித் தராமல் இருந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை தனது வீட்டு வழியாகச் சென்ற சீனிவாசனை சக்திவேல் தடுத்து நிறுத்தி கடனைத் திருப்பிக் கேட்டு, கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த சீனிவாசன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.