தேவா்குளம் அருகே காற்றாலையில் இருந்து ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகளை திருடியதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேவா்குளம் அருகே உள்ள தடியம்பட்டி பகுதியில் சென்னை மயிலாப்பூரில் செயல்படும் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு காற்றாலையில் கடந்த ஜன.30 ஆம் தேதி நள்ளிரவு புகுந்த மா்மநபா்கள் அங்கிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான காப்பா் கம்பிகளை திருடிச் சென்றனராம்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் இளநிலை மேலாளரான திருநெல்வேலியைச் சோ்ந்த மாரியப்பன் (53) என்பவா் தேவா்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் தொடா்புடைய கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் அருகே உள்ள கருங்கல் பகுதியைச் சோ்ந்த வா்கீஸ் மகன் சஜின் (30) என்பவரை கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
300 கிலோ காப்பா் கம்பி திருட்டு: போலீஸாா் விசாரணை
மொபட் திருட்டு: இருவா் கைது

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவில் பைக் திருடியவா் கைது

கடன் தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

