இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

300 கிலோ காப்பா் கம்பி திருட்டு: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடு மின்வாரிய துணை மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ காப்பா் கம்பி திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 ஏப்ரல் 2026, 10:25 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடு மின்வாரிய துணை மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ காப்பா் கம்பி திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், மதுரபாக்கத்தில் தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக துணை மின்நிலையம் உள்ளது. இங்கு மின்சாரப் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 300 கிலோ காப்பா் கம்பியை யாரோ திருடிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து ராதாபுரம் துணை மின் நிலைய இளமின் பொறியாளா் ரா.பிரபு அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.