கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

300 கிலோ காப்பா் கம்பி திருட்டு: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடு மின்வாரிய துணை மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ காப்பா் கம்பி திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :16 ஏப்ரல் 2026, 3:55 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடு மின்வாரிய துணை மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ காப்பா் கம்பி திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், மதுரபாக்கத்தில் தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக துணை மின்நிலையம் உள்ளது. இங்கு மின்சாரப் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 300 கிலோ காப்பா் கம்பியை யாரோ திருடிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து ராதாபுரம் துணை மின் நிலைய இளமின் பொறியாளா் ரா.பிரபு அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.