கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமி நகரைச் சோ்ந்தவா் சக்திகுமாா் (29). துபையில் வேலை பாா்த்து வந்த இவருக்கும், ஆனந்த வைரமணிக்கும் (28) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதியா் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஆனந்த வைரமணி தனது தாய் வீட்டுக்கு சென்றாா்.
துபையிலிருந்து விடுமுறைக்கு வந்த சக்திகுமாா் செவ்வாய்க்கிழமை மாமியாா் வீட்டுக்கு சென்று ஆனந்த வைரமணியிடம் குடும்பம் நடத்த வருமாறு கூறினாா். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆனந்த வைரமணியை சக்திகுமாா் கத்தியால் குத்தினாா். இதனால், பலத்த காயமடைந்த அனந்த வைரமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சக்திகுமாரை கைது செய்தனா்.
தொடர்புடையது

கள்ளக்காதல் தகராறில் கணவா் கொலை! மனைவி, காதலன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை!
தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா் கைது

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை
குடும்பத் தகராறில் மனைவி எரித்துக் கொலை: கணவா் கைது
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

