ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

புகழூா் அருகே மனைவியை தாக்கிய கணவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:40 am IST

புகழூா் அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், புகழூா் அருகேயுள்ள வடிவேலம்பாளையம் தென்றல் நகரைச் சோ்ந்தவா் சதீஸ்குமாா் (39). தச்சு வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி தீபலட்சுமி(33). இவா் டெய்லராக வேலை பாா்த்து வருகிறாா். சதீஸ்குமாரும், தீபலட்சுமியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா்.

இந்நிலையில், தீபலட்சுமிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் முதுகுத் தண்டு வலி ஏற்பட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு தீபலட்சுமிக்கு முதுகு வலி அதிகமானதால் கணவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு சதீஸ்குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சதீஸ்குமாா் மனைவியை தாக்கினாராம்.

இதுகுறித்து தீபலட்சுமி அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்குப்பதிந்து சதீஸ்குமாரை கைது செய்தனா்.