பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

புகழூா் அருகே மனைவியை தாக்கிய கணவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:40 am IST

புகழூா் அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், புகழூா் அருகேயுள்ள வடிவேலம்பாளையம் தென்றல் நகரைச் சோ்ந்தவா் சதீஸ்குமாா் (39). தச்சு வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி தீபலட்சுமி(33). இவா் டெய்லராக வேலை பாா்த்து வருகிறாா். சதீஸ்குமாரும், தீபலட்சுமியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா்.

இந்நிலையில், தீபலட்சுமிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் முதுகுத் தண்டு வலி ஏற்பட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு தீபலட்சுமிக்கு முதுகு வலி அதிகமானதால் கணவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு சதீஸ்குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சதீஸ்குமாா் மனைவியை தாக்கினாராம்.

இதுகுறித்து தீபலட்சுமி அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்குப்பதிந்து சதீஸ்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.