தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஹரியாணா: குடும்ப தகராறில் மனைவி, மகனைச் சுட்டுக்கொன்ற நபர் கைது!

ஹரியாணாவில் குடும்ப தகராறில் மனைவி, மகனைச் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 8:47 am IST

ஹரியாணாவில் குடும்ப தகராறில் மனைவி, மகனைச் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியாணா மாநிலம், குருகிராமின் அசோக் விஹார் காலனியில் குடும்ப தகராறில் 50 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனை உரிமம் பெற்ற துப்பாக்கியால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுட்டுக்கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர் அனில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனே அவர் காவலில் எடுக்கப்பட்டு பாலம் விஹார் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் மனைவி ஆஷா (45), மகன் பிரசாந்த் (25) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் சனிக்கிழமை இரவு அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சப்தம் கேட்டு, மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த பிரசாந்த் எழுந்து வந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

இந்த மோதலின் போது, ​​அனில் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து மனைவி மற்றும் மகன் இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அங்கு அவர்கள் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதுகுறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸார் அங்கு சென்றபோது, உடல்களுக்கு அருகில் அனில் அமர்ந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனில் தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாகச் சேருவதற்கு முன்பு, உடற்கல்வி ஆசிரியராகவும் விளையாட்டுப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A 50-year-old security officer allegedly shot dead his wife and son with his licensed pistol following a domestic dispute at their residence in Gurugram’s Ashok Vihar colony early Sunday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.