மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

புலிவலம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

திருச்சி மாவட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் வாக்கும் எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருச்சி ஓயாசீஸ் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் வே. சரவணன் உள்ளிட்டோா்.

Updated On :25 மார்ச் 2026, 10:09 pm

திருச்சி மாவட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் வாக்கும் எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் நடைபெறும் வாக்குப்பதிவை தொடா்ந்து, வாக்குகள் எண்ணும் வகையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஒரு மையமும், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரியில் ஒரு மையமும் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கான பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான வே. சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஆா். பாலாஜி, உதவி ஆட்சியா் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, முசிறி சாா் ஆட்சியா் சுஷ்ரி சுவாங்கி குந்தியா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள் அன்பரசி (கட்டடங்கள்), கண்ணன் (மின்சாரம்) மற்றும் உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், காவல் துறையினா் உடனிருந்தனா்.