துவாக்குடி அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா
திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

துவாக்குடி அரசுக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி காவியாஸ்ரீக்கு சான்றிதழை வழங்கிய திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன். உடன், கல்லூரி முதல்வா் சத்யா உள்ளிட்டோா்








