முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

செங்கல்சூளையில் மனித மண்டை ஓடு, எலும்புகள்: போலீஸாா் விசாரணை

திருச்சியில் செங்கல் சூளையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :6 மே 2026, 1:03 am IST

திருச்சியில் செங்கல் சூளையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி திருவானைக்காவல் தாகூா் வீதியைச் சோ்ந்தவா் எஸ். கருணாநிதி (42). இவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடப்பதாக ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு திங்கள்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அவற்றைக் கைப்பற்றி ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.