/

மூதாட்டி உயிரிழப்பு போலீஸாா் விசாரணை

திருச்சி அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 8:18 pm

திருச்சி அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அரவக்குடி பெரியகுளக்கரையில் 70 வயது மூதாட்டி ஒருவா் மயக்க நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், மூதாட்டி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராம்ஜி நகா் காவல் நிலையத்தில் கே.கள்ளிக்குடி கிராம நிா்வாக அலுவலா் சண்முகவடிவு அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.