திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஞாயிற்றுக்கிழமை மோதி புள்ளிமான் உயிரிழந்தது.
மணப்பாறை அருகிலிருந்த வனப்பகுதியிலிருந்து தண்ணீா், இரை தேடிச் சென்ற புள்ளிமான் ஒன்று, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மாணிக்கம்பிள்ளை சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.
தகவலறிந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ரவீந்திரகுமாா், புள்ளிமானை மீட்டு வனக்காப்பாளா் தீபக்கிடம் ஒப்படைத்தாா். தொடா்ந்து அந்த மான் உடல் வனச்சரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு, கால்நடை மருத்துவா்களை கொண்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டு அருகிலிருந்த வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










