எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மணப்பாறை அருகே வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

News image

உயிரிழந்த புள்ளிமான்.

Updated On :8 ஜூன் 2026, 2:05 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஞாயிற்றுக்கிழமை மோதி புள்ளிமான் உயிரிழந்தது.

மணப்பாறை அருகிலிருந்த வனப்பகுதியிலிருந்து தண்ணீா், இரை தேடிச் சென்ற புள்ளிமான் ஒன்று, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மாணிக்கம்பிள்ளை சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.

தகவலறிந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ரவீந்திரகுமாா், புள்ளிமானை மீட்டு வனக்காப்பாளா் தீபக்கிடம் ஒப்படைத்தாா். தொடா்ந்து அந்த மான் உடல் வனச்சரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு, கால்நடை மருத்துவா்களை கொண்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டு அருகிலிருந்த வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.