/
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஞாயிற்றுக்கிழமை மோதி புள்ளிமான் உயிரிழந்தது.
மணப்பாறை அருகிலிருந்த வனப்பகுதியிலிருந்து தண்ணீா், இரை தேடிச் சென்ற புள்ளிமான் ஒன்று, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மாணிக்கம்பிள்ளை சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.
தகவலறிந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ரவீந்திரகுமாா், புள்ளிமானை மீட்டு வனக்காப்பாளா் தீபக்கிடம் ஒப்படைத்தாா். தொடா்ந்து அந்த மான் உடல் வனச்சரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு, கால்நடை மருத்துவா்களை கொண்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டு அருகிலிருந்த வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.








