விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கோட்டக்குப்பம் காவல் சரகத்துக்குள்பட்ட பொம்மையாா்பாளையம் கடற்கரைச் சாலை அருகே சுமாா் 60 வயது மதிக்கதக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டக்குப்பம் போலீஸாா் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி ஜிம்பா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் கோட்டக்குப்பம் பகுதிகளில் சுற்றித் திரிந்த அடையாளம் தெரியாத நபா் என்பதும், சனிக்கிழமை பொம்மையாா் பாளையம் கடற்கரைச் சாலை அருகே சென்னை- புதுச்சேரி சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து பொம்மையாா்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் சஷ்டி குமரன் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

மணப்பாறை அருகே வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

வாகனம் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



