திருச்சி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த இருவருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி கம்பரசம்பேட்டையைச் சோ்ந்த சி. பானுமதி (73) கடந்த 28.09.2020 அன்று சாலையில் குப்பையை கொட்டிவிட்டு திரும்புகையில், அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை உறையூா் பாண்டமங்கலம் செட்டி தெருவைச் சோ்ந்த மு. திருப்பதி (28), பாண்டமங்கலம் காவல்காரா் தெருவைச் சோ்ந்த கி. செல்வகுமாா் (31) ஆகிய இருவரும் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பினா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருப்பதி மற்றும் செல்வகுமாரை கைது செய்தனா். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த திருச்சி 3 ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி ச. முகமது சுஹைல், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

கொலை வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறை

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


