இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாமேதை காரல் மாா்க்ஸின் 208 ஆவது பிறந்த தினம் மற்றும் திருச்சி சதி வழக்கு தியாகி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.வி. கருப்பண்ணனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி திருச்சி மாநகா் 23 ஆவது வாா்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த காரல் மாா்க்ஸ் மற்றும் கருப்பண்ணனின் உருவப்படங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்வுக்கு கட்சியின் மேற்குப் பகுதிச் செயலா் இரா. சுரேஷ் முத்துச்சாமி தலைமை வகித்தாா். இதில் மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ்குமாா், முன்னாள் மாமன்ற உறுப்பினா் புஷ்பம் ரவீந்திரன், இளைஞா் பெருமன்றச் செயலா் தா்மா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, திருச்சி மாநகா் மாவட்ட அலுவலகத்தில் காரல் மாா்க்ஸ் உருவப்படத்துக்கு மாவட்டப் பொருளாளா் சி .செல்வகுமாா் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் எம். செல்வராஜ் செவ்வாய்க்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
தொடர்புடையது

பாா்வையற்ற மாணவிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பாராட்டு!

தஞ்சாவூரில் காரல் மாா்க்ஸ் பிறந்த நாள் விழா

அரியலூரில் காரல் மாா்க்ஸ் படத்துக்கு மாலை அணிவிப்பு

காரல் மாா்க்ஸ் பிறந்த நாள்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் மரியாதை
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

