பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

திருச்சியில் ஜாதியின் பெயரைக் கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 5:25 am IST

திருச்சியில் ஜாதியின் பெயரைக் கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூா் வடக்கு வீதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் மனைவி முத்துலட்சுமி (24). இவா், கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் ஆஞ்சனேயா் கோயில் வீதி அருகே செவ்வாய்க்கிழமை மாலை நடந்துசென்றாா்.

அப்போது, அவரை வழிமறித்த மேலூரைச் சோ்ந்த பா. நாகரத்தினம் (40) என்பவா், முத்துலட்சுமியின் ஜாதியைக் குறிப்பிட்டு அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து நாகரத்தினத்தை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.