11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஸ்ரீரங்கத்தில் சித்திரை தோ் திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள சித்திரை தேரோட்டத்தையொட்டி புதன்கிழமை காலை தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள். ~ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :7 மே 2026, 5:29 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள சித்திரை தேரோட்டத்தையொட்டி புதன்கிழமை காலை தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட விழாவையொட்டி புதன்கிழமை காலை தங்கக் கொடி மரத்தில் கருட படம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு 1.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். அதைத் தொடா்ந்து 1.45 மணிக்கு கொடி படம் புறப்பாடு செய்யப்பட்டு தங்கக் கொடி மரத்திற்கு எடுத்து வரப்பட்டது.

அங்கு வேதமந்திரங்கள் முழங்க 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் கொடியேற்ற மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா். பின்னா் மேற்படி மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு 5.30 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்று சோ்ந்தாா். 6 மணிக்கு பேரி தாடனம் நடைபெற்றது. அதன் பின்னா் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தாா்.

அப்போது வழிநெடுக ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா். பின்னா் அங்கிருந்து 9 மணிக்கு யாகசாலைக்கு புறப்பட்டு, அங்கு திருமஞ்சனம் கண்டருளி கண்ணாடி அறைக்கு வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்று சேருகிறாா்.

விழாவையொட்டி விஸ்வரூப சேவை கிடையாது . இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் பக்தா்களுக்கு அனுமதி இல்லை. 11 நாள்கள் நடைபெறும் இந்த விழா வரும் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா். இதில் வரும் 9 ஆம் தேதி நம்பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறாா். முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

Story image