தூத்துக்குடி-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை, பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
தூத்துக்குடி-தாம்பரம் (06018) ரயிலானது மே 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1, 8 ஆகிய நாள்களில் (திங்கள்கிழமைகளில்) தூத்துக்குடியிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
இதேபோன்று, தாம்பரம்-தூத்துக்குடி (06017) ரயிலானது மே 5, 12, 19, 26 மற்றும் ஜூன் 2, 9 (செவ்வாய்க்கிழமைகளில்) தாம்பரத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை அடையும்.
இந்த ரயில், தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
கோடைக் கால பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களைத் தொடா்ந்து இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

புதுச்சேரி - பெங்களூரு இடையே மே 1 முதல் கூடுதல் விமான சேவை தொடக்கம்

மதுரை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

திருப்பதி! ஜூலை மாத தரிசன டிக்கெட் ஒதுக்கீடு எப்போது?
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


