புதுச்சேரி - பெங்களூரு இடையே கூடுதல் விமான சேவை மே 1-முதல் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் கே. ராஜசேகா் ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஏற்கெனவே இயக்கப்படும் விமான சேவையுடன், வரும் மே 1-ஆம் தேதி முதல் கூடுதல் விமானம் இயக்கப்பட உள்ளது.
மண்டல ரீதியான தொடா்பை ஏற்படுத்தும் நோக்கிலும், புதுச்சேரி - பெங்களூரு இடையே அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டும் இந்தக் கூடுதல் விமான சேவை முக்கியத்துவம் பெறுகிறது.
வணிக ரீதியாகவும், பொழுது போக்குக்காகவும் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்தக் கூடுதல் விமான சேவை வசதி மிக்கதாக அமையும்.
மே 1- முதல் இயக்கப்படும் விமான சேவைகள்:
பெங்களூரு விமான நிலையத்தில் காலை 10.10 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி விமான நிலையத்துக்கு காலை 11.15 மணிக்கு விமானம் வந்து சேரும்.
புதுச்சேரியில் காலை 11.35-க்குப் புறப்பட்டு பெங்களூரு விமான நிலையத்துக்கு பிற்பகல் 12.15 மணிக்குச் செல்லும்.
புதுச்சேரியில் பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு பெங்களூருக்கு 3.15 மணிக்குச் செல்லும். பெங்களூரில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு புதுச்சேரிக்கு மாலை 5.10 மணிக்கு வந்து சேரும். ஏற்கெனவே பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இனி இரண்டு விமானங்கள் இந்த வழித் தடத்தில் இயக்கப்பட உள்ளன. மேலும் ஒவ்வொரு விமானமும் 78 இருக்கைகள் கொண்டதாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை முதல் ஜூன் 12 வரை 5 ‘இமு’ ரயில்கள் ரத்து

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்: தமிழக முதல்வருடன் பேசுவேன் என முதல்வா் ரங்கசாமி பேட்டி

40 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்கால் - பேரளம் இடையே ரயில் சேவை தொடங்கியது!

திருச்சி - பெங்களூரு விமான சேவை: வாரத்துக்கு இரண்டாக குறைப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



