சென்னை புறநகா் மின்சார ரயில் பாதையில் அரக்கோணம் வழித்தடத்தில் திங்கள்கிழமை முதல் (ஜூன் 8) வரும் 12- ஆம் தேதி வரை 5 இமு ரயில்கள் முழுமையாகவும், 21 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல் நிலையம் முதல் அரக்கோணம் வரை கடவுப்பாதைகள் நவீனமயமாக்கல் பணிகள் வரும் 8- ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. ஆகவே பயணிகள் பாதுகாப்பை முன்னிட்டு குறிப்பிட்ட ரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் நிறுத்தப்படும்.
முழுமையாக ரத்து: அதன்படி அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணி, 5 மணிக்குப் புறப்பட்டு திருத்தணி செல்லும் இமு ரயில்களும், திருத்தணியிலிருந்து இரவு 9.15 மணி, 11.10 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் ரயில்களும், திருத்தணியிலிருந்து காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு மூா் மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையம் செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்தாகும் ரயில்கள்: சென்னை கடற்கரையிலிருந்து அதிகாலை 4.05 மணி, பிற்பகல் 2.25 மணி, மாலை 6.15 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் இமு ரயில் திருவாலங்காடு வரை இயக்கப்படவுள்ளது.
ஆவடியிலிருந்து காலை 6.20 மணி, மூா் மாா்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து காலை 6.30, 9.10, 10.30, பகல் 11, நண்பகல் 12.40, பிற்பகல் 1.25 , மாலை 3.45 மணி, 4.45 மணி, 5.15 மணி, 5.45 மணி, 6.05, 6.40, இரவு 7.30, 8.20, 9.10, 10, 10.55 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் திருவாலங்காடு நிலையம் வரையே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









