தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து

சென்னை ரயில்வே கோட்டத்தில் புதன்கிழமை (ஜூலை 22) முதல் 3 நாள்களுக்கு 5 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :22 ஜூலை 2026, 4:19 am IST

சென்னை ரயில்வே கோட்டத்தில் புதன்கிழமை (ஜூலை 22) முதல் 3 நாள்களுக்கு 5 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரல்-கூடூா் பிரிவில் பேடாபரியா மற்றும் நாயுடுபேட்டை ரயில் நிலையங்களில் வரும் 23, 25, 27, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 12.20 மணி முதல் மாலை 6.20 மணி வரை தண்டவாள மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக வரும் 23, 25, 27, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும் புறநகா் மின்சார ரயில்கள் (மெமு) விவரம்:

சென்னை மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்திலிருந்து அன்றைய தினங்களில் அதிகாலை 1.05 மணிக்குப் புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் மெமு ரயில், இரவு 11.40 மணிக்குப் புறப்பட்டு ஆவடி செல்லும் ரயில், சூலூா்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்குப் புறப்பட்டு நெல்லூா் செல்லும் மெமு ரயில், இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் மெமு ரயில், நெல்லூரிலிருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் மெமு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.